பழம்பெருமை வாய்ந்த கங்கை நதியை தேசிய நதியாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கங்கையை மாசு மற்றும் குப்பை கூளம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக உயர் அதிகாரம் கொண்ட கங்கை ஆற்றுப்படுகை ஆணையம் ஒன்றை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.