1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

வடஇந்தியர்கள் தாக்குதல்: நாடாளுமன்றம் தள்ளிவைப்பு!

வடஇந்தியர்கள் தாக்குதல் நாடாளுமன்றம் தள்ளிவைப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே வாரியத் தேர்வு எழுத வந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது, ம௦காராஷ்டிர நவ நிர்மாண் சேனாவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் இன்று மக்களவையில் எதிரொலித்தது.

அவை கூடியதும், வேறு சில பிரச்சினைகளும் எழுப்பப்பட்டதால் கடும் கூச்சல்-குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதேபோன்று மாநிலங்களவையிலும் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
About Writer
Webdunia