ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தங்களுக்கும் சம்பள விகிதத்தில் மாற்றம் வேண்டும் என பாதுகாப்புப் படையினர் போராட்டம் நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட நிலையில், மத்திய காவல் அமைப்பினர் மற்றும் துணை ராணுவப் படையினரும் தங்களுக்கும் அதே சம்பள அடிப்படை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.