சிமி இயக்கத்தை சேர்ந்த 3 பேர் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (SIMI) சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மும்பை, பெங்களூரு காவல் துறையினர் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையில் கடந்த வாரம் தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், ஜிலனாபாத், மெஹபூப் நகர், மொனினாபூர் ஆகிய இடங்களில் இருந்து சிமி இயக்கத்தினர் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவல்துறை உதவியுடன் கைது செய்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர்களில் நவ்சத், அகமது பாவா என்பவர்களின் செல்பேசியில் இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 3 பேரிடமும் செல்பேசியில் தொடர்ந்து பேசியது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக பெங்ளூரு கொண்டுவரப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மும்பை, பெங்களூரு காவல் துறையினர் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையில் கடந்த வாரம் தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், ஜிலனாபாத், மெஹபூப் நகர், மொனினாபூர் ஆகிய இடங்களில் இருந்து சிமி இயக்கத்தினர் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவல்துறை உதவியுடன் கைது செய்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர்களில் நவ்சத், அகமது பாவா என்பவர்களின் செல்பேசியில் இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 3 பேரிடமும் செல்பேசியில் தொடர்ந்து பேசியது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக பெங்ளூரு கொண்டுவரப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
