மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்குப் பெற 21- 22 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் இல்லத்தில் இன்று நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட விவரம் பற்றி விளக்குகையில், இதைத் தெரிவித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சவாலை நாங்கள் தைரியமாக ஏற்கிறோம், நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கும்...