இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக இடதுசாரிகளுடன் உள்ள கருத்து முரண்பாடு தீர்க்கப்படும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார். இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பிரணாப் முகர்ஜி இன்று சண்டிகரில்...