கோலாலம்பூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி பீஜிங்கிற்கு புறப்பட்ட பயணிகள் விமானம் 239 பயணிகளோடு மாயமானது. தற்போது வரை இந்த விமானம் தொடர்பாக தெளிவான தகவல்கள் பெறப்படாத நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா கண்காணிப்பு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.