கோலாலம்பூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி பீஜிங்கிற்கு புறப்பட்ட பயணிகள் விமானம் 239 பயணிகளோடு மாயமானது. தற்போது வரை இந்த விமானம் தொடர்பாக தெளிவான தகவல்கள் பெறப்படாத நிலையில் இந்த விமானம் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் தாழ்வாக ஓட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.