வன்னிப் பகுதியில் சிறிலங்கப் படையினரின் தொடர் தாக்குதலால் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலைமைகள் குறித்துப் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.