இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளதாகவும், இந்தியா தாக்கினால் அதற்கு தகுந்த பதிலடி தரும் வல்லமையை தனது ராணுவம் பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.