இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங், லாகூர் சிறையில் மரண தண்டனைக் கைதிகள் இருக்கும் அறையிலிருந்து சாதாரண கைதிகளை அடைக்கும் அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் சரப்ஜித் சிங்கின் மரண தண்டனை ரத்தாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.