1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

வங்கதேசத்தில் வாகன விபத்து: 11 பேர் பலி!

வங்கதேச‌ம் டாக்கா தேஜ்ஹார் பரிசால்
வங்கதேசத்தில் ‌‌சி‌ற்று‌ந்து மீது லாரி மோதியதில், திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

வங்க தேச தலைநகர் டாக்காவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பரிசால் மாவட்டத்தின் தேஜ்ஹார் கிராமத்தில் இந்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

திருமண வீட்டார் 25 பேர் அந்த சிற்றுந்தில் பயணம் செய்ததாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்களகூறுகின்றனர். அதில் 5 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் ஷேரே பாங்ளா மருத்துவமனையில் இறந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 13 பேர் கோர்நாடி சுகாதார நிலையம், ஷேரே பாங்ளா மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Webdunia