பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 ராணுவத்தினர் பலி!
பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
லாடா கோட்டை என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் தங்கள் முதல் தாக்குதலைத் தொடங்கியதாகவும், ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் பின்வாங்கியதாகவும் ராணுவச் செய்தித் தொடர்பாளர் அத்தர் அப்பாஸ் கூறினார்.
தெஹ்ரிக் இ தலிபான் என்ற தீவிரவாத அமைப்பின் தளபதியும், அல் கய்டா இயக்கத்தின் துணைத் தளபதியுமான பைதுல்லா மசூத்திற்கு இத்தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
லாடா கோட்டை என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் தங்கள் முதல் தாக்குதலைத் தொடங்கியதாகவும், ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் பின்வாங்கியதாகவும் ராணுவச் செய்தித் தொடர்பாளர் அத்தர் அப்பாஸ் கூறினார்.
தெஹ்ரிக் இ தலிபான் என்ற தீவிரவாத அமைப்பின் தளபதியும், அல் கய்டா இயக்கத்தின் துணைத் தளபதியுமான பைதுல்லா மசூத்திற்கு இத்தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
