இப்போதெல்லாம் டைரி எழுதும் பழக்கம் பேஸ்புக் என்ற சமூக வலைத்தளங்களுக்கு நகர்ந்துள்ளது. ஆனால் இது வெறும் டைரி மட்டுமல்ல சாதாரண அன்றாட விஷயங்கள் முதல் அறிவார்ந்த வாத விவாதங்கள், கவிதை, கட்டுரை, செய்திகள், கருத்துகள் என்று உலகின் பல விஷயங்களையும் ஒரே பக்கத்தில் கொண்டு வந்து கொட்டுவது பேஸ்புக்.