ஜனநாயகம் தனது கடமைகளைச் செய்ய தவறும்போது அல்லது ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை வரித்துக் கொள்ளும் அரசியல் தலைகள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி ஆட்டிப்படைக்கும்போது அவ்வப்போது சில சக்திகள் அதனை எதிர்க்க வெளிவரும் என்பதுதான் மனித நியதி, அரசியல் நியதி, அறத்தின் நியதி.