ஊழலை ஒழிப்பு மற்றும் கறுப்பு பணம் பிரச்சனையை கையிலெடுத்து மத்திய அரசுக்கு பெரும் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருக்கும் யோகா குரு பாபா ராம்தேவின் போராட்டத்தின் பின்னணியில், பா.ஜனதா உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ள குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை உள்ளதோ இல்லையோ, மன்மோகன் சிங் அரசுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகளை கொடுக்கும் விதத்தில் ராம்தேவை வசமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது பா.ஜனதா.