Rahul - New avatar against corruption | ராகுல் காந்தி: ஊழலை ஒழிக்கத் தோன்றிய புதிய அவதாரம்!
FILE
மராட்டிய மாநிலத்தில் எண்ணெயில் கலப்படம் செய்து கொள்ளையடித்துவரும் மாஃபியா கும்பலால் மாவட்ட துணை ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் ‘அதிர்ச்சி’ தெரிவித்த ராகுல் காந்தி, “ஊழல் இந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் பெரும் பிரச்சனையாக நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இப்படியெல்லாம் கூறிவிட்டு நிறுத்தியிருந்தால், எல்லா அரசியல்வாதியும் பேசுவதைத்தானே ராகுல் காந்தியும் பேசியுள்ளார் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர் அடுத்த உதிர்த்த பொன்னான வார்த்தைகளே சோனாவானே படுகொலையை விட நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
“காங்கிரஸ் உள்ள நாங்கள் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்!
ஊழலிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதா?அதுவும் கடுமையாக? எந்த நடவடிக்கை? எப்போது எடுத்தது? யார் மீது? என்றெல்லாம் நீண்ட நேரம் சிந்தித்தபோதுதான், ராகுல் காந்தி உதிர்த்த வார்த்தைகளின் ‘தாத்பர்யம்’ புரிந்தது.
1966ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்றது முதல் இப்போது 6 ஆண்டுக் காலமாக பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் வரை காங்கிரஸ் கட்சி ஊழலிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்னவெல்லாம் என்பதை இந்த நாடு நன்றாகவே பார்த்துள்ளது, பார்த்துக் கொண்டும் இருக்கிறது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சிக்காக ‘நிதி சேகரித்த’தில் நடந்ததாக கூறப்பட்ட ஊழலிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அந்த ஊழலின் முக்கிய சாட்சியான, அதில் தொடர்புடையவரான நகர்வாலா என்பவர் கொல்லப்பட்டார். இது ஊழலிற்கு எதிரான நடவடிக்கைதானே?
FILE |
இந்திரா காந்தியின் மகனும், இன்றைக்கு ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த ஊழல்தான் - ஆழ குழித் தோண்டிப் புதைக்கப்பட்ட பிறகும் - சமீபத்தில் உயிர் பெற்று எழுந்துள்ள போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். அந்த ஊழலின் முக்கிய குற்றவாளியான இத்தாலி ‘பிசினஸ்மேன்’ ஒட்டோவியோ குட்ரோக்கியை நாட்டை விட்டு தப்பவிட்டு, பிறகு அவருக்கு எதிராக சர்வதேச காவல்துறையால் (இண்டர்போல்) விடுத்த சிகப்பு எச்சரிக்கை அறிக்கையை திரும்பப் பெற்று, பிறகு அவர் தரகுப் பணம் பெற்றதற்கான நேரடி ஆவணங்களை சுவீடன் புலனாய்வுப் பிரிவினர் அளித்தும், அதனை ஏற்க மறுத்து, நீதிமன்றத்தில் ஜெராக்ஸ் காப்பியை தாக்கல் செய்து, அந்த காரணத்திற்காகவே வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வைத்து, பிறகு ஓடடோவியோ குட்ரோக்கியின் லண்டன் கணக்குகள் மீதான தடையை நீக்கி, இறுதியாக அந்த ‘மாமனித’ருக்கு எதிரான வழக்கை ‘இதற்கு மேலும் தொடர்வது நியாயம் இல்லை’ என்று டெல்லி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகத்தைக் கொண்டே மனு செய்ததுவரை, இவை யாவும் ஊழலிற்கு எதிராக - அதாவது ஊழல் செய்தவரை முழுமையாக காப்பாற்றி, அதன் மூலம் ஊழல் என்ற ஒன்று நடைபெற்றதற்கு ஆதாரமே இல்லை என்று சட்டப்படி முடிவு செய்ய - மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதானே?
ஊழலை ஒழிப்பது என்பது, அதற்கான ஆதாரங்களை அழிப்பதுதான் என்பது காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கை அல்லவா?
அதனால்தான், இப்போது கூட, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததும்,
FILE
FILE
இந்த நாட்டில் உள்ள ஊடகங்களும், அதில் பெரிதாக எழுதி, பேசி கிழிப்பவர்கள் என்று அனைவரும் பெரு நிறுவனங்களின், அரசியல் கட்சிகளின் பாக்கெட்டில் உள்ளதால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற ‘கருத்துச் சுதந்திரம்’ ராகுல் காந்திக்கு உள்ளது, எனவே பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சியும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கடந்த சில மாதங்களில் இந்த நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுவிட்டனர். அவர்களுக்கு உள்ள பிரச்சனை, இதற்கு ஏது மாற்று? என்பதுதான். மாற்றம் தேவை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள், அவர்களே மாற்றையும் உருவாக்குவார்கள். சிறிது காலம் ஆகும்.
அதுவரை ராகுல் காந்தி போன்றவர்கள் ‘எதிர்காலம்’ பற்றி கனவு கண்டுக்கொண்டிருக்கலாம். ஊழலை ஒழிக்கத் தோன்றியுள்ள புதிய அவதாரம் இவரே என்று காங்கிரஸ் கட்சி கூட பிரச்சாரம் செய்யலாம், அதனை வார்த்தை பிசகாமல் ஊடகங்களும் எழுதலாம். ஏமாறுவதற்குத்தான் மக்கள் இருக்க மாட்டார்கள்.
