2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த இந்தியத் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தணிக்கையாளர் கண்டுபிடித்துக் கொடுத்துள்ள விவரங்கள், எப்படிப்பட்ட திட்டமிட்ட மாபெரும் முறைகேடு இது என்பதை தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளது.