இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு திட்டமிட்டு நடத்திவரும் தொடர் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, இராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, அமைதி பேச்சுவார்த்தையைத் துவக்குமாறு சிறிலங்க அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.