சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்கவேண்டும் என்ற ‘உன்னத’ நோக்கோடு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் வழக்கறிஞர்கள் எடுத்த வைத்த வாதத்தை தங்களின் மத-அரசியலிற்காகவும், தேர்தல் வசதிக்காகவும் சில அரசியல் தலைவர்கள் மிக லாவகமாக முறுக்கி, திருத்தி அறிக்கை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயன்றுள்ளனர்.