முல்லைப் பெரியாறு : பேச ஒப்புக்கொண்டது தவறு!
|
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று மத்திய நீர்வள ஆணையத்தின் நிபுணர்கள், தமிழக, கேரள நீர் பாசனத்துறை பொறியாளர்களுடன் இணைந்து சோதனை செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முடக்கும் வண்ணம் கேரள அரசு தனது மாநிலத்தின் பாசனம் மற்றும் அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி தமிழக அரசு செய்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 3வது
|
பிரதமரின் முன்னிலையில் எவ்வளவு விரைவாக பேச்சுவார்த்தை நடந்தாலும் முதல் பேச்சுவார்த்தையிலேயே எந்த முன்னேற்றமோ அல்லது முறிவோ (அதுதான் இறுதியில் ஏற்படும்) ஏற்பட்டுவிடப் போவதில்லை. பல கட்டங்களாக பேச்சுவார்த்தையை இழுக்க கேரள அரசு முயற்சிக்கும். அந்த நிலையில் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, இரு மாநில முதல்வர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்குமாறு கேரள அரசு கேட்டுக்கொள்ளும், வேறு வழியில்லாமல் தமிழக அரசும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
|
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக தீர்வு காண்பதற்கு ஏதுமில்லை என்று கூறிவரும் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், அம்மாநில பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனும், பிரச்சனைக்கு ஒரே தீர்வு புதிய அணை கட்டுவது என்றும், அது குறித்து பேச தமிழக அரசு முன்வரவேண்டும் என்றும்தான் கூறிவருகிறார்கள். இது, தமிழகத்தின் நிலைப்பாட்டோடு எந்தவிதத்திலும் தொடர்புடையதன்று.
|
இந்த நிலையில், பிரதமரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கேரள முதலமைச்சருடன் பேசுவதற்கு தமிழக முதல்வர் எந்த அடிப்படையில் ஒப்புக்கொண்டார் என்பது புரியவில்லை. புதிய அணை குறித்து பேசவேண்டும் என்றே கேரள முதல்வர் கூறியுள்ளார். அப்படியானால், புதிய அணை கட்டுவது குறித்து பேசுவதற்கு தமிழக முதலமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளாரா? என்பதனை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.
