தூத்துக்குடி துறைமுகத்தில் 8-வது தளத்தை சரக்கு முனையமாக மேம்படுத்துவதற்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் ரூ.312.23 கோடி செலவில் உருவாக்கி, இயக்கி, ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படும்.