இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநிலம் பந்தார்பூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான ராம்தாஸ் அத்வால், சத்யம் கம்ப்யூட்டர் கணக்கு முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ (மத்திய புலனாய்வு கழகம்) விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், இந்த பிரச்சனயில் பாராமுகமாக இருந்து செபி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.