புது டெல்லி:உலகில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவையும் கடுமையாக பாதிக்கும். அத்துடன் இதற்கு தீர்வு ஏற்பட எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஆகும். இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அரசு எல்லா உதவிகளையும் வழங்கும் என்று தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.