1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு ஆசிய சந்தைகளே காரணம்!

பங்குச் சந்தை வீழ்ச்சி நிதியமைச்சர் சிதம்பரம்
ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தாக்கமே இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று ஏற்பட்டுள்ள சரிவிற்கு காரணம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்!

டெல்லியில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய சிதம்பரம், சந்தைகளில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கம் சாதாரணமானதுதான் என்றும், அதில் கவலைப்படுவதற்கு ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த அரசு பொறுப்பேற்ற போது 4,400 ஆக இந்திய பங்குச் சந்தைக் குறியீடு இன்று 15,000 ஆக உயர்ந்துள்ளது என்று சிதம்பரம் கூறினார்.

நாம் உலகப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக உள்ளதால் இப்படிப்பட்ட சந்தை ஏற்றத் தாழ்வுகள் நம்மையும் பாதிக்கவே செய்யும் என்று சிதம்பரம் கூறினார்.