1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை மும்பை தேசிய நிஃப்டி
இந்த வாரத்தின் துவக்க நாளான இன்று மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்வை எதிர்கொண்டன.

நண்பகல்வாக்கில் பிஎஸ்இ குறியீடு 239 புள்ளிகள் உயர்ந்து 10,213.99 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமையைக் காட்டிலும் 2.39 விழுக்காடு உயர்வாகும்.

நிஃப்டி குறியீடு 69 புள்ளிகள் அதிகரித்து 12 மணியளவில் 3,133.20 ஆக இருந்தது.

கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகமாகவே இருந்த பங்குச் சந்தை குறியீட்டு, இந்த வார துவக்கத்தில் உயர்வை நோக்கிச் செல்வதால் முதலீட்டாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
About Writer
Webdunia