1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மே‌ட்டூ‌ர் அணை‌யி‌‌லிரு‌ந்து 14,000 கனஅடி நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ம்!

மேட்டூர் அணை காவிரி பாசனம் விவசாயிகள்
மேட்டூர் அணயில் இருந்து, காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிக்காக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு விநாடிக்கு 11,190 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிரு‌க்‌கிறது.

இன்று காலை அணையின் நீர் மட்டம் 86.100 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி ஆகு‌ம்.

கல்லணையில் இருந்து காவிரி ஆறு, வென்னாற்றில் விநாடிக்கு 1,520 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே போல் கல்லணை கால்வாயில் விநாடிக்கு 4,671 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கொள்ளிடம் கால்வாயில் இரு‌ந்து 814 அடி கன ‌நீ‌ர் வெ‌‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.
About Writer
Webdunia