விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 20 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல், இன்று முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் பணி மேற்கொள்ளப்படும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் கொள்முதல் செய்யப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.