தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்படுவதற்கு முன்பு வளைகுடா நாட்டுக்குச் செல்லும் மோகம் இந்தியா உள்ளிட்ட துணைக் கண்ட நாடுகளில் அதிகமிருந்தது. சாதரணக் கூலித் தொழிலாளிகள் முதல் உயர் கல்வி மேட்டுக்குடியினர் வரை துபாய், குவைத், சவுதி அரேபியா, மஸ்கட், ஏமன், ஷார்ஜா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.