இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்.ஐ.டி), இந்திய மேலாண்மைக் கழகங்கள் (ஐ.ஐ.எம்) ஆகிய மத்திய அரசின் நிதியுதவி பெரும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கவும், அவர்களின் மனவலிமையை அதிகரிக்கச் செய்யவும் அனைத்துக் கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் நிரந்தரமாக குறை தீர்ப்பு மையம் ஏற்படுத்தி உளவியல் நிபுணர்கள் மூலமாக மாணவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை கூறியுள்ளது.