1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. க‌ல்‌வி

கோவை வேளாண் பல்கலை.‌யி‌ல் உதவி பேராசிரியர்களை நியமிக்க தடை!

வேளாண் பல்கலைக்கழக‌ம் பேராசிரியர் உயர் நீதிமன்றம்
கோவவேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களை நியமிக்க செ‌ன்னஉயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இததொட‌ர்பாகோவை வேளாண் பல்கலைக்கழக ஆ‌தி‌திரா‌விட‌ர்- பழ‌ங்குடி‌யின‌ரஊழியர் நலச்சங்க தலைவர் சந்திரசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து‌ள்ள மனுவில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

அ‌ந்த ‌விள‌ம்பர‌த்‌தி‌ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்ற விபரம் இல்லை. ஏற்கனவே ஆ‌தி‌திரா‌விட‌ர்- பழ‌ங்குடி‌யின‌ ‌பிரிவினருக்கு சேர வேண்டிய ‌பி‌‌ன்னடைவப‌‌ணி‌யிட‌ங்க‌ள் நிரப்பப்படாமல் உள்ளன.

அந்த இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடாமல், ஒட்டுமொத்தமாக உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆ‌தி‌திரா‌விட‌ர்- பழ‌ங்குடி‌யின‌ பிரிவினருக்கு எத்தனை இடங்களை என்பதை அறிவித்த பிறகுதான், உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அதுவரை உதவி பேராசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். எ‌ன்றகூறியிருந்தார்.

இ‌ந்மனு ‌நீ‌திப‌தி பா‌லவச‌ந்தகுமா‌‌ரமு‌ன் ‌விசாரணை‌க்கவ‌ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவை வேளாண் பல்கலை‌க்கழஉதவி பேராசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதி‌‌த்து, அடுத்த கட்ட விசாரணையை 28ஆ‌ம் தேதிக்கு தள்ளி வை‌த்தா‌ர்.

அன்றைய ‌தின‌மவேளாண் பல்கலைக்கழக‌துணவே‌ந்த‌ர், பதிவாளர், ஆ‌தி‌திரா‌விட‌‌ரநல‌ததுறசெயலாள‌ர், ‌விவசாய‌ததுறசெயலாள‌ரஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia