வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Murugan
Last Modified: வியாழன், 2 ஜூன் 2016 (16:30 IST)

பெருஞ்சீரகத்தின் (சோம்பு) மருத்துவ பயன்

இன்றைய காலகட்டத்தில் சில பெண்களுக்கு தாய்மை அடைவது என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது.


 

 
என்னதான் மருத்துவ அறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சிலருக்கு மருந்து மாத்திரை மற்றும் சிகிச்சைகளால் பல பக்கவிளைவுகளுக்கும் ஆளாகி வருவது உண்டு.
 
பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது.  இதனால் சிலர் குழந்தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள்.  
 
இதற்கான எளிய தீர்வுண்டு.  
 
நாம் அன்றாடம் சமயலறையில் இருக்கும் எளிய மூலிகையான சோம்புதான் அது.  
 
சோம்பு-வை இளம் வறுவலாக வறுத்து பொடித்து , ஒரு வேளைக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது சுவைக்காக பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வருவார்களேயானால், அவர்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகி விரைவிலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.