ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!
ஹரியானா, ஃபரிதாபாத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது மூன்று சகோதரிகளின் ஆபாச படங்களால் மிரட்டப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர் ராகுல் பாரதி தற்கொலை செய்துகொண்டார்.
'சாஹில்' என்ற நபர், ராகுலின் தொலைபேசியை ஹேக் செய்து, ஏஐ தொழில்நுட்பத்தில் படங்களை உருவாக்கி, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ரூ. 20,000 கேட்டுள்ளார். மேலும், ராகுல் தற்கொலை செய்துகொள்ளுமாறு அவரை தூண்டியதாகவும் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் மாத்திரைகளை உட்கொண்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராகுலின் தந்தை, மகள்கள் ஆபாச படங்களைக் கொண்டு துன்புறுத்தப்பட்டதே மரணத்திற்கு காரணம் என்றார். ராகுலின் தாயார், இந்த சதிக்கு தனது மைத்துனர் நீரஜ் பாரதிக்கு தொடர்பு இருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், ராகுலின் செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். இது சைபர் குற்றவியல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த தீவிரமான உதாரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Edited by Siva