தொடர்புடைய செய்திகள்
- கல்லூரியில் பி.காம் படிக்கும்போதே கிடைத்த வேலை.. சம்பளம் ரூ.12 லட்சம்..!
- வேலையில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.. இந்திய பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்த Realme நிறுவனம்..
- தேர்வு மையங்களில் குளறுபடி: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அதிரடியாக ஒத்திவைப்பு!
- ஊர்க்காவல் படை பணி.. 8,000 பேர் குவிந்ததால் விமான ஓடுதளத்தில் தேர்வு வைத்த அதிகாரிகள்
- 22 ஆண்டுகளில் இல்லாத அதிக பணிநீக்கம்: அக்டோபரில் மட்டும் 1.5 லட்சம் பேர் வேலை இழப்பு..!
Oracle அதிரடி: இந்தியாவில் மட்டும் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்; மீண்டும் ஒரு சுற்றுக்கு வாய்ப்பு!
பிரபல அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Oracle, இந்தியாவில் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு வருட பணிக்காலத்திற்கு 15 நாட்கள் ஊதியம், ஒரு மாத நோட்டீஸ் கால ஊதியம், விடுப்பு பணமாக்கல் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவற்றை வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும், சுமுகமாக பதவி விலகும் ஊழியர்களுக்கு கூடுதலாக இரண்டு மாத ஊதியம் 'டாப்-அப்' தொகையாக வழங்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவில் ஆரக்கிள் நிறுவனத்தில் மொத்தம் 30,000 பேர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது பெரும் பகுதி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு கட்ட பணிநீக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பணி நேர கூடுதல் சுமை மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் இந்த அதிரடி முடிவுக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.
Edited by Siva
