ராமர் கோயில் கட்டும் பணியை யாரும் தடை போட முடியாது: சாத்வி பிராச்சி ஆவேசம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை யாரும் தடை போட முடியாது என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மீரட்டில், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில், அயோத்தியில் ராமர் கோவிலை அடுத்த ஆண்டு கட்டுவோம். இதற்கான பணிகள் அடுத்த வருடம் துவங்கும்.
கோவில்கட்ட தேவையான கற்கள் தயாராகி வருகின்றன. ராமர் கோயில் கட்டும் பணியில் யாரும் தடை போட முடியாது என்றார்.