செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (12:58 IST)

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள்: குடியரசு தலைவர் உத்தரவு!

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு, மத்திய பிரதேச மாநில ஆளுநராக மங்கு பாய் படேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அதேபோல் ஹரியாணா மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா அவர்களை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக ராஜேந்திர விசுவநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை திரிபுர ஆளுநராக சத்தியநாராயணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை ஜனாதிபதி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.