ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூன் 2016 (06:55 IST)

மோடியுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு - காரணம் என்ன?

மோடியுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு - காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 14 ஆம் தேதி சந்திக்க  உள்ளார்.
 
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அதிமுக வெற்றிக்கும். முதல்வர் ஜெயலலிதா வெற்றிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
 
இதனால், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, வரும் 14 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல  உள்ளார்.
 
அப்போது, தனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மோடிக்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் தெரிவிப்பார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.