வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (13:49 IST)

4 கோடி பணம் கொடுத்த சென்னை கிங்ஸ் வீரர்...மோசடி செய்த சென்னை தொழிலதிபர்

இந்திய கிரிக்கெட் அணியின்  சுழற்பந்து வீச்சாளரும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் சென்னை தொழிலதிபர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்த ஹர்பஜன் சிங், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் 4 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு8 ஏமாற்றியுள்ளதாகவும் அப்பணத்தை வாங்கித் தரும்படி சென்னை மாநகர காவல்துறையிடம் சில நாட்களுக்கு முன் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்த தொழிலதிபர் தனக்கு இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.