செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Ravivarma
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (13:07 IST)

உபயோகமான சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள்!

எலுமிச்சை சாதம் செய்யும் போது அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
 
சப்பாத்தி செய்யும் போது முதலில் சூடான பால், உப்பு மற்றும் மாவு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். இப்போது மிருதுவான சப்பாத்தி தயார்.
துணைப் பதார்த்தம் (பொ‌ரியல் போன்றவைகளில்) செய்யும் போது அதில் சிறிதளவு சோயா சாஸ் சேர்த்தால் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். சாஸில் உப்பு இருப்பதால் இதை சேர்க்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம்.
 
வீட்டில் சர்க்கரை நோயாளி இருந்தால் சோயாபீன்ஸ் 1 கிலோ, புழுங்கலரிசி 1 கிலோ, உளுந்து 200 கிராம்ஸ் சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது தோசை வார்த்து சாப்பிடலாம். 
 

அரிசியை 5 அல்லது 10 கிலோ வாங்கும் போது அதில் சிறிது நாட்களுக்குப் பிறகு பூச்சி உ‌‌ண்டாகு‌ம். அதற்கு அதில் சிறிதளவு உப்பு சேர்த்தால் பூச்சி இருக்காது.
 
காய்கறிகளை வேகவைக்கும் போது அவற்றை முழுதாக வேக வைக்கவும். துண்டு துண்டுகளாக நறுக்கும் போது அதிலுள்ள புரோட்டீன்ஸ் மற்றும் தேவையான கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் குறைகின்றன.
இடியாப்பம் செய்து அதோடு காய்கறிகள் அல்லது கொத்துக்கறி சேர்த்து புலாவ் செய்தால் ருசி நன்றாக இருக்கும்.
 
மைதா மாவில் அப்பமோ அல்லது அஞ்சரப்பட்டி முறுக்கோ செய்தால் அதனுடன் முட்டை சேருங்கள் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
 
சாம்பாருடன் சிறிதளவு கரம் மசாலா பொடி மற்றும் தனியா பொடி சேர்க்கவும். கரம் மசாலா பொடியில் புரோட்டீனும் தனியாப் பொடியில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. ஆகையால் சிக்குன் குனியாவில் இருந்து விடுபடலாம்.