பாரத தேசம் பக்தி நிரம்பியது. பல முனிவர்களும் மகான்களும் இங்கு தோன்றி பக்தி வளர்வதற்காகத் தொண்டாற்றி உள்ளனர். இறைவனை அவரவர்களுக்குத் தோன்றிய வகையில் உருவகப்படுத்தி, பக்தி பூர்வமான பாடல்களை இயற்றி சதா சர்வ காலமும் அவற்றைப் பாடிப் பரவசமடைந்திருக்கிறார்கள்.