அக்காள்-தங்கை தொடரின் இயக்குநர் புவனேஷ் பேட்டி
|
தொலைக்காட்சி தொடர் இயக்குநராக இருந்தாலும் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் அவர்களை பாதித்த இயக்குநர்கள் என்று சிலர் இருப்பார்கள். உங்களை பாதித்தவர்கள் யார்?
முதலில் மகேந்திரன், இரண்டாவது மணிவண்ணன், இவங்க இரண்டு பேரோட படங்களையும் பார்த்து வியந்திருக்கிறேன். மகேந்திரன் சாரோட கதைக்களம், எடுக்கப்படும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மணிவண்ணன் சாரோட கமர்ணஷியல, எவ்வளவு பெரிய விஷயத்தையும் அழகா புரியும்படி சொல்ற பாணி ரொம்ப பிடிக்கும்.
இந்த இரு இயக்குனர்களோட பாதிப்புதான் சொந்த ஊரிலிருந்து உங்களை சினிமாவில் சேர சென்னைக்கு அழைத்து வந்தது என்று கூறலாமா?
1993ல் சேலம் அழகாபுரத்திலிருந்து சினிமாவில் சேர என்னை சென்னைக்கு இழுத்து வந்தது இவங்க இரண்டு பேரோட படங்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
சினிமாவில் சேர வந்த நீங்க எப்படி சீரியல் இயக்குனரானீங்க?
|
எப்படி தொலைக்காட்சிக்கு வந்தீங்க?
ஏழு படம் முடிச்சதும் சொந்தமா படம் இயக்க முயற்சி பண்ணுனேன். சில காரணங்களால் அந்த முயற்சி தள்ளிப் போச்சு. அந்த சமயம் ஏவிஎம் தயாரிச்ச நிம்மதி, பாசம் தொடர்களுக்கு வசனம் எழுதுற வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அஞ்சு வருஷம் எழுதுற மாதிரி ஆயிடுச்சு.
இடைப்பட்ட காலத்தில் நிறைய பேர் தொடர் இயக்க சொல்லி கேட்டாங்க. நான் மறுத்துவிட்டேன். சினிமாதான் என்னோட கனவா, லட்சியமா இருந்தது. ஆனா கலைஞர் தொலைக்காட்சியில் அக்காள் - தங்கை தொடர் இயக்க வாய்ப்பு வந்தப்போ மறுக்க முடியலை. பாலாஜி டெலிபிலிம் ஹெட் பிரசாந்த், என்னோட நண்பர் கதாசிரியர் சேக்கிழார் இருவரும்தான் நான் தொடர் இயக்கக் காரணம்.
அக்காள் - தங்கை தொடருக்கு வரவேற்பு எப்படி இருக்கு?
|
அதே நேரம் சீரியலுக்கு அதிகமான நேரமும் உழைப்பும் தேவைப்படுது. சின்னச் சின்ன மனஸ்தாபங்களும் உண்டு. என்ன நடந்தாலும் இயக்குநர் எனப்வர் கேப்டன் மாதிரி எதுக்கும் தலைவணங்கக் கூடாதுங்கிறது என்னோட பாலிசி.
நல்ல சம்பளம், புகழ்... தொடர்ந்து சீரியல் இயக்குவதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?
கண்டிப்பா இல்லை. இந்த சீரியல் நூறு எபிசோடு முடிஞ்சிடும். அப்புறம் வெளியே வந்திருவேன். என்னோட கனவு, லட்சியம் எல்லாம் சினிமாதான். என் மானசீக குரு மணிவண்ணன். அவர் மாதிரி நல்ல கமர்ஷியல் டைரக்டர்னு பெயர் எடுக்கணும். அதுவரை ஓயுறதா இல்லை.
