மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு பெரிய காவியப் பாடலென்றே கூறவேண்டும்.