1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. மு‌ன்னோ‌ட்ட‌ம்

மழைக்காலத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் இயக்குனர்

மழைக்காலத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் இயக்குனர்
சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் தலைப்பை மாற்றி கௌதம் மேனன் படத்தை தயாரித்து இயக்கப் போகிறார் என்பது தெரிந்த செய்தி.

இதில் த்ரிஷாவுடன் புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். படத்தில் மழைக்கு முக்கியத்துவம் இருப்பதால் மழை பெய்யும் இந்த சூழ்நிலையில் படத்தை இயக்க பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் கௌதம்மேனன்.

அதோடு சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம் படத்திற்கும் திரும்ப வேண்டும் என்பதால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிக்கப் போகிறாராம்.

வருகின்ற 25ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
About Writer
Webdunia