1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பந்தயத்தை வைத்து ஒரு படம்!

பலம் முரளி கிருஷ்ணா தீபா சாரி
பார்வை ஒன்றே போதுமே படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணாவின் புதிய படம் பலம். புதுமுகம் அரவிந்த் வினோத், தீபா சாரி நடிக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டும் ஹீரோவுக்கு, ஒரு பந்தயமே வினையாக விடிகிறது. அது என்ன பந்தயம், அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பது கதை.

படத்தின் கதையை விட கதாநாயகி தீபா சாரி மீதே மொத்த கோடம்பாக்கத்தின் கவனம் உள்ளது. தீபா சாரி இந்திப் படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்தவர். கவர்ச்சி விஷயத்தில் அவர் எட்டாவது வள்ளல். திகட்டத் திகட்ட வாரி வழங்குகிறார். பலத்தின் படப்பிடிப்பே முடியாத நிலையில் தீபா சாரியின் அறைமுன் தயாரிப்பாளர்களின் க்யூ.

சினிமாவில் தனது 'பலம்' தெரிந்து வைத்துள்ளார் தீபா சாரி.
About Writer
Webdunia