1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

நான் கடவுளில் கவிஞர் விக்கிரமாதித்யன்!

நான் கடவுள் கவிஞர் விக்கிரமாதித்யன்
இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவுக்குமான தொடர்பு ரொம்பவும் மெல்லியதுமு. இப்போது அதில் மாற்றம். கதை வசனத்தில் மட்டுமல்லாது, நடிப்பிலும் இலக்கியவாதிகள் முத்திரை பதிக்கிறார்கள்.

பாலாவின் நான் கடவுள் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுவது தெரியும். அதில் முக்கியமான வேடத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் நடித்துள்ளார்.

தமிழ் நவீன இலக்கியத்தில் தவிர்க்க முடியாதவர் விக்ரமாதித்யன். கதை, கவிதை, கட்டுரைகள் என முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நடிப்பு அனுபவம் இதுவே முதல் முறை.

சுந்தர் சி.யின் ஆயுதம் செய்வோம் படத்திலும் ஒரு இலக்கியவாதி நடிக்கிறார். அவர் வேல. ராமமூர்த்தி. கிராமம் சார்ந்த கதைகள் இவரது அடையாளம்.

தமிழ்ப் படங்களில் இலக்கிய அம்சம் குறைவு என்ற புகார் இனி வராது!