வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 மே 2016 (14:43 IST)

அமைச்சர் முகத்தில் கேக்கை வீசிய இளைஞர்

ஜெர்மனில் அகதிகளுக்கு எதிராக செயல்பட்ட அமைச்சர் முகத்தில இளைஞர் ஒருவர் கேக்கினை வீசினார்.


 


 
ஜெர்மனி நாட்டின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான சாரா பாராளுமன்றத்தில் தொடர்ந்து அகதிகளுக்கு ஏதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். சாரா, பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகள் வருகை தான் ஜெர்மனில் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பிரச்சனை ஏற்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் அகதிகளில் புள்ளி விவரத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அதனால் அகதிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் இருத்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் கட்சி மாநாட்டின் போது, அறைக்குள் திடீரென்று நுழைந்த இளைஞர் ஒருவர் சாரா முகத்தில் சாக்லெட் கேக்கினை வீசியுள்ளார். இதுகுறித்து அந்த அகதிகளின் ஆதரவாளர்கள், இத்தகைய செயல்களை செய்தது நாங்கள் தான் என்றும், இது சாரா அகதிகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக தான் என்றும் தெரிவித்துள்ளனர்.