வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (15:07 IST)

ரோட்ல வேண்டாம், வீட்டு வாசலில் பண்ணுவோம்: மது தலைக்கேறிய மாதுவின் களியாட்டம்!

ரோட்ல வேண்டாம், வீட்டு வாசலில் பண்ணுவோம்: மது தலைக்கேறிய மாதுவின் களியாட்டம்!

ஸ்காட்லாந்தில் குடிபோதையில் வீட்டின் வெளியே வாசலில், அருகில் உள்ளவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் சத்தம் போட்டு உடலுறவு வைத்துக்கொண்ட பெண்ணை வீட்டின் உரிமையாளர் வெளியேற்றியுள்ளார்.


 
 
சார்லி பிளாக்லா என்ற அந்த பெண் ஏற்கனவே வாடகை ஒழுங்காக செலுத்தாமல் அந்த வீட்டில் வசித்து வந்தார். இவர் மது அருந்த சென்ற போது அங்கு ஒருவருடன் அறிமுகமாகி அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துள்ளார்.
 
ஜான் கிர்லேண்ட் எனும் அந்த நபரை சந்தித்த ஒரு மணி நேரத்தில் வீட்டின் வாசலில் வைத்து அவருடன் உடலுறவு வைத்துள்ளார். வரும் வழியில் சாலையிலேயே உடலுறவு கொள்ள அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதனை நிராகரித்த ஜாண் கிர்லேண்ட் அந்த பெண்ணின் வாடகை வீட்டின் வாசலில் உடலுறவு கொள்ள சம்மதித்துள்ளார்.
 
இவர்கள் இருவரும் மது போதையில் சத்தம்போட்டுக் கொண்டு உடலுறவு கொண்ட தால் அதிருப்தியடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
 
பின்னர் காவல்துறையினர் வந்து இருவரையும் கைது செய்தனர். போதையில் இருந்ததால் அந்த பெண்ணுக்கு தான் செய்தது எதுவும் நினைவில் இல்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.