தொடர்புடைய செய்திகள்
- போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி சிறுமிகள் கடத்தல்.. துரிதமாக செயல்பட்ட காவல்துறை..!
- நீரில் விழுந்த 3 நண்பர்களை காப்பாற்றிவிட்டு இந்திய மாணவர் மரணம்!.. அமெரிக்காவில் சோகம்!...
- நீ ஒரு பைத்தியம்!. நான் மட்டும் இல்லனா நீ ஜெயில்ல இருப்ப!.. நெதன்யாகுவிடம் கோபம் காட்டிய டிரம்ப்!...
- நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள்.. யாரை சொல்கிறார் டிரம்ப்?
- ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!. புதுமண ஜோடிக்கு நேர்ந்த சோகம்!...
13 வயது சிறுமியை 700 ஆண்கள் பாலியல் பலாத்காரம்.. எல்லோருமே பாகிஸ்தான் கயவர்கள்.. எம்பி சொன்ன அதிர்ச்சி தகவல்..
பிரிட்டனில் பல ஆண்டுகளாக அரங்கேறி வரும் பாலியல் சீண்டல் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ளார். அவரது தனிப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த கும்பல்கள் பிரிட்டனின் 85-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறுமிகளை குறிவைத்து கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரமான சித்திரவதைகளில் ஈடுபட்டு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் 13 வயது முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 600 முதல் 700 ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட 15-20 சிறுமிகளை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசு விசாரணைகளின்படி, இத்தகைய திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இனம் மற்றும் மத ரீதியான பாகுபாடுகளுடன், குறிப்பாக வெள்ளையின மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளே இந்த கொடூரங்களுக்கு பெருமளவில் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1997 முதல் 2013 வரை ரோதர்ஹாம் பகுதியில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனம் சார்ந்த விமர்சனங்களுக்கு பயந்து, காவல்துறையும் உள்ளூர் நிர்வாகமும் நீண்ட காலமாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Edited by Siva
