வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2016 (05:00 IST)

தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு ஆப்பு

தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு பூட்டு

துருக்கியில் தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு அந்நாட்டு அரசு பூட்டு போட்டது.


 
 
துருக்கியிலிருந்து  ஐஎம்சி என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொலைக்காட்சி, துர்க்சாட் நிறுவனத்திடம் அலைவரிசை பெற்று இயங்கி வந்தது. இந்த நிலையில், இந்த தொலைக்காட்சி தீவிரவாதத்தை வேண்டும் என்றே பரப்புவதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது.

இதனையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், ஐஎம்சி என்ற தொலைக்காட்சியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பேரில் துர்க்சாட் நிறுவனத்திற்கு துருக்கி அரசு ஐஎம்சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தடை விதித்தது. இதனை ஏற்று அதன் சேவை நிறுத்தப்பட்து.

துருக்கி அரசின் இந்த செயலுக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.