ஒரு நோபல் பரிசுக்காக இந்திய உறவை சிதைத்துவிட்டார் டிரம்ப்.. முன்னாள் அமெரிக்க தூதர் குற்றச்சாட்டு..!
முன்னாள் அமெரிக்க தூதர் ரஹ்ம் இம்மானுவேல், அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இந்திய-அமெரிக்க உறவுகளை சிதைத்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். 40 ஆண்டுகால திட்டமிடலை டிரம்ப் வீணாக்கியதாக அவர் வேதனை தெரிவித்தார்.
சீனாவை எதிர்கொள்வதற்கான முக்கிய காரணியாக இந்தியா இருக்கும் நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் தவறான கையாளுதல் பேரழிவை ஏற்படுத்தியதாகவும் இம்மானுவேல் கூறினார்.
இந்த சீர்குலைவுக்குப் பின்னணியில் இரண்டு காரணங்களை இம்மானுவேல் முன்வைக்கிறார்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாக கூறப்பட்ட போர் நிறுத்தத்திற்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப்பை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்க மறுத்ததே உறவில் விரிசல் ஏற்பட முதல் காரணம். டிரம்ப் தனது அகங்காரத்தின் காரணமாகவே இந்திய உறவை புறக்கணித்தார்.
டிரம்ப் தனது மகன்கள் பங்குதாரர்களாக உள்ள ஒரு நிறுவனத்துடன் பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சில் வணிக ஒப்பந்தம் செய்ததற்காக, டிரம்ப் பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது ஒரு பெரிய தவறு என்று இம்மானுவேல் கண்டித்தார், இதன் மூலம் சீனா தனது ஆதிக்கத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவின் இந்த தவறுகளை சீனா பயன்படுத்தி கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Edited by Siva